கே.பி.யிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அட்டர்னி ஜெனரலுக்கு இலங்கை கோர்ட் உத்தரவு!!
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி என்ற குமரன் பத்மநாதனிடம் இதுவரை இலங்கை அரசு நடத்திய விசாரணை விவரங்கள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய அட்டர்னி ஜெனரலுக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை நீதிமன்றத்தில் ஜே.வி.பி. சார்பில் அண்மையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் தம்மை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் என்று அறிவித்துக் கொண்டவர் கே.பி. என்ற குமரன் பத்மநாதன். அவர் மீது முந்தைய மகிந்த ராஜபக்சே அரசு எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
கே.பி. மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கும் போது அவர் மீது ஏன் விசாரணை நடத்தப்படவில்லை? அவர் எப்படி கிளிநொச்சியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார்?
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பணம், தங்கம், கப்பல்கள் ஆகியவற்றை மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே மற்றும் கே.பி. ஆகியோர் பகிர்ந்து கொண்டார்களா என்ற கேள்வி மக்களிடத்தில் எழுந்துள்ளது.
மேலும் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சிவில் வாழ்க்கையில் இணைக்கப்பட்டுள்ளனர். ஆனால் கே.பி.க்கு புனர்வாழ்வுக்கும் உட்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு ஜே.வி.பி. தமது மனுவில் தெரிவித்திருந்தது.
இம்மனுவை நேற்று விசாரித்த இலங்கை நீதிமன்ற நீதிபதிகள் விஜித மலல்கொட மற்றும் ஏ.எச்.எம்.டீ. நவாஸ் ஆகியோர், கே.பி. விவகாரம் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் பிப்ரவரி 5-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications