Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடாலியால் வெட்டப்பட்ட இலங்கை அதிபர் மைத்ரிபாலவின் சகோதரர் மரணம்!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: கோடாலியால் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடி வந்த இலங்கை அதிபர் மைத்ரிபாலவின் சகோதரர் பிரியந்த சிறிசேன இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Sri Lankan President Sirisena's brother killed in axe attack

இலங்கையின் பொலன்னறுவ பகுதியில் நண்பர் ஒருவரால் கோடாலியால் வெட்டப்பட்டு படுகாயமடைந்தார் பிரியந்த சிறிசேன. அவர் கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இன்று அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன தற்போது சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இலங்கைக்கு நாளைதான் திரும்ப உள்ளார்.

இதனால் நாளை மறுநாள் பொலன்னறுவவில் பிரியந்த சிறிசேனவின் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரியந்தவை தாக்கிவிட்டு சரணடைந்த நபரை ஏப்ரல் 8-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+