சிறையில் இருந்த விடுதலைப் புலிகளுக்கு விஷ ஊசி- யு.எஸ். மருத்துவர்கள் பரிசோதிக்க அனுமதி மறுப்பு
யாழ்ப்பாணம்: இலங்கை சிறையில் இருந்த போது விஷ ஊசி போடப்பட்டது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளை யாழ்ப்பாணத்தில் முகாமிட்டுள்ள அமெரிக்கா விமானப் படை மருத்துவர்கள் பரிசோதிக்க அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துவிட்டது.
2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டு ராணுவ முகாம்களில் சிறை வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இப்படி விடுதலையான விடுதலைப் புலிகளில் 109 பேர் மர்மமான முறையில் நோய் தாக்கி உயிரிழந்துள்ளனர். இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினியும் ஒருவர்.

11,000 புலிகள் உயிர் ஊசல்
இது தொடர்பாக இலங்கை சிறையில் இருந்த விடுதலைப் புலிகள் கூறுகையில், தங்களுக்கு விஷ ஊசி போடப்பட்டுள்ளது என்றும் 11,000 புலிகளின் உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினர். இது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சர்வதேச மருத்துவர்கள் குழு
இச்சம்பவம் தொடர்பாக தமிழர்கள் வாழும் இலங்கையின் வடக்கு மாகாண சபையில் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தில் பாதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை பரிசோதிக்க சர்வதேச மருத்துவர்கள் குழுவை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

அமெரிக்கா ராணுவ மருத்துவர்கள்
இந்த நிலையில் இலங்கை ராணுவத்துடனான கூட்டு பயிற்சிக்காக அமெரிக்கா ராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டுள்ளனர். இவர்களில் அமெரிக்காவின் விமானப் படை மருத்துவர்களும் உள்ளனர். இவர்களைக் கொண்டு பாதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை பரிசோதிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியிருந்தார்.

அனுமதிக்க இலங்கை மறுப்பு
ஆனால் இதை இலங்கை சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன நிராகரித்துள்ளார். அமெரிக்கா மருத்துவர்களை விட சிறந்த மருத்துவர்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications