தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை விலக்கினால்தான் அரசுடன் இணக்கம்: விக்னேஸ்வரன்
Subscribe to Oneindia Tamil
யாழ்ப்பாணம்: தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவத்தை விலக்கினால் மட்டுமே அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவோம் என்று வடக்கு மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் நிபந்தனை விதித்துள்ளார்.
இது குறித்து விக்னேஸ்வரன் கூறியுள்ளதாவது:
இலங்கை அரசாங்கம் இராணுவ முகாம்களை அகற்றி ராணுவத்தினரை வெளியேற்றும் என உறுதியான வாக்குறுதியை வழங்க வேண்டும். அந்த வாக்குறுதி அளிக்கப்பட்ட நாளிலிருந்து அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்பட தயாராக உள்ளோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் இராணுவ முகாம்களை வடக்கிலிருந்து வெளியேற்றுவதாக தெரிவித்திருக்கிறோம். இதனால் வடக்கு வாழ் தமிழ் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இவ்வாறு விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications