For Quick Alerts
For Daily Alerts
Just In
இலங்கை தேர்தல்: வெளியூர்களில் இருந்து வாக்களிக்க வருவோருக்காக சிறப்பு பஸ்கள்
கொழும்பு: இலங்கையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, வாக்காளர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும், தேர்தல் முடிந்த பின்னர் தொழில்களுக்கு திரும்புவதற்கும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
18ம் தேதி வரையில் இந்த சிறப்பு பேருந்துகள் சேவைகள் செயல்படும். வெளியூர்களில் இருந்து வாக்களிக்க தங்கள் சொந்த தொகுதிகளுக்கு வந்தவர்களுக்கு இந்த ஏற்பாடு பலனளிக்கும்.
தேசிய போக்குவரத்து சேவை ஆணைக்குழு இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. தலைநகர் கொழும்பு மற்றும் கூட்ட நெரிசல் மிக்க பகுதிகளிலிருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
Comments
English summary
Special buses operate for parliament election voting in Srilanka.
Story first published: Monday, August 17, 2015, 14:03 [IST]