Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு.. எப்போது தெரியுமா? முழு விவரம்!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் தற்போதைய அதிபரின் பதவிக்காலம் விரைவில் முடிவடையை உள்ள நிலையில், அதிபர் தேர்தல் நடைபெறும் தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று இலங்கை. வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள தீவு நாடான இலங்கையில் தற்போது அதிபராக ரனில் விக்ரமசிங்கே அதிபராக உள்ளார். ராஜபக்சே சகோதார்களின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கையில் கடந்த 2022- ஆம் ஆண்டு வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டது.

Srilankan Election Commission Announce the date of presidential Election

இதனால், நாடு முழுவதும் வெகுண்டெழுந்த மக்கள், அதிபர் இல்லத்திற்குள் புகுந்தனர். இலங்கை முழுவதும் போராட்டம் வெடித்ததால், அதிபர் கோத்தபய பராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார். மஹிந்தா ராஜபக்சேவும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இலங்கையில் ஏர்பட்ட வரலாறு காணாத போராட்டத்தையடுத்து, கோத்தபய ராஜபக்சேவும் தனது அதிபர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, அங்கு அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பாட்டார். நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் விக்ரமசிங்கே அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இலங்கையில் கடந்த 1993- ஆம் ஆண்டுக்கு பிறகு நாடாளுமன்ற மூலம் தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் விக்ரமசிங்கே தான் ஆவார்.

தற்போது அதிபராக இருக்கும் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்ய இந்த ஆண்டு இலங்கையில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இலங்கையில் அதிபர் தேர்தல் எப்போது நடைபெறும் என்ற விவரத்தை அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாவது:-

"இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 ஆம் தேதிக்குள் நடைபெறும்" என்று தெரிவித்துள்ளது. தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று கடந்த மாதமே அவரது ஆதரவாளர்கள் அறிவித்தனர். புதிய சின்னத்தில் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுவார் என்றும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக யுஎன்பி கட்சியின் மூத்த தலைவர் அசு மரசிங்கே கூறுகையில், "பல கட்சிகள் ரணில் விக்ரமசிங்கேவை தேசிய வேட்பாளாராக முன்னிறுத்தும்" என்றார். இலங்கையின் ஐக்கிய தேசிய கட்சியின் (UNP) தலைவராக 1994-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வரும் ரனில் விக்ரமசிங்கே, ஐந்து முறை பிரதமராக பதவி வகித்துள்ளார்.

விக்ரமசிங்கேவை எதிர்த்து அவரது கேபினட்டில் அங்கம் வகிக்கும் விஜேயதசா போட்டியிடுவார் என்று தெரிகிறது. தற்போது நீதித்துறை அமைச்சராக இருக்கும் விஜேயதசா ராஜபக்சேவை அதிபர் தேர்தலில் போட்டியிட வைக்க இருப்பதாக இலங்கை சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்ரிபால சிறிசேனா கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+