தமிழக மீனவர்கள் 8 பேர் 2 படகுகளுடன் கைது.. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!
தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் 2 படகுகளுடன் சிறைபிடித்து சென்றுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் 2 படகுகளுடன் சிறைபிடித்து சென்றுள்ள சம்பவம் மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுகோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் இரண்டு படகுகளில் நெடுந்தீவு அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் 8 பேரையும் 2 படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர்.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு இலங்கை கடற்படை மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications