இலங்கையில் இந்தியக் குழு ஆய்வு: வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடப்பதாக தமிழர்கள் போராட்டம்
கொழும்பு: இந்தியாவின் நிதியுதவியோடு இலங்கையில் போரில் பாதிக்கப் பட்ட தமிழர்களுக்காக கட்டப்பட்டு வரும் வீடுகளை இந்திய குழுவினர் நேரில் சென்றுப் பார்வையிட்டனர்.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சுஜாதா மேத்தா தலைமையிலான குழு இலங்கை சென்றுள்ளது. இந்தியக் குழுவில், இந்திய துணைத் தூதர் மகாலிங்கம், வெளியுறவுத்துறை செயலாளர் பினய் குமார், வெளியுறவு அமைச்சக நிதி இயக்குநர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, வெளியுறவு அமைச்சகத்தின் கீழ்நிலைச் செயலர் ஜோன் மாய் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்தியக் குழு வவுனியாவின் புதுக்குளத்தில் வீடு கட்டும் திட்டங்களை பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து, ஏற்கனவே வீடுகளை பெற்ற பயனாளிகளை சந்தித்து கலந்துரையாடினர்.
இதனிடையே, இலங்கையில் வீடிழந்த தமிழர்களுக்கு இந்தியா சார்பில் வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வதில் மோசடி நடைபெறுவதாகக் கூறி, அதனைக் கண்டித்து வவுனியாவில் போராட்டம் நடைபெற்றது. வீடு வழங்கும் திட்டத்தில் இலங்கை கைத்தொழில் அமைச்சர் தலையீடு இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.
வவுனியா மாவட்ட மக்கள் குழு சார்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications