யாழ். வல்வெட்டிதுறையில் பிரபாகரனின் இடிக்கப்பட்ட வீடு முன்பாக நள்ளிரவில் பிறந்த நாள் கொண்டாட்டம்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் வீடு முன்பாக பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாணம்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 63-வது பிறந்தநாளை யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறையில் அவரது இடிக்கப்பட்ட வீடு முன்பாக நள்ளிரவில் இளைஞர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
தமிழீழ தேசியத் தலைவராக போற்றப்படும் பிரபாகரனின் 63-வது பிறந்த நாள் இன்று உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் நள்ளிரவு 12 மணி முதலே பிரபாகரனின் பிறந்த நாள் விழா களைகட்டத் தொடங்கியது.

இலங்கை யாழ்ப்பாணத்தில் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டிதுறையில் ராணுவத் தடையை மீறி பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாடபட்டுள்ளது. வல்வெட்டித்துறையில் பிரபாகரன் பிறந்த வீட்டை சிங்கள ராணுவம் இடித்துள்ளது.
இடிக்கப்பட்ட அந்த வீட்டின் முன்பாக தமிழ் இளைஞர்கள் நள்ளிரவு 12 மணிக்கு ஒன்று திரண்டு கேக் வெட்டி பிரபாகரன் பிறந்த நாளை வாழ்த்து முழக்கங்களுடன் கொண்டாடி உள்ளனர்.












Click it and Unblock the Notifications