Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊடகங்கள் காட்டியது பிரபாகரன் உடலே அல்ல.. உயிருடன் இருக்கலாம்- 'ரா' அதிகாரி சுப்ரமணியம் திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை யுத்தத்தின் போது ஊடகங்கள் காட்டியது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் அல்ல; அவர் உயிருடன் இருக்கலாம் என்று 'ரா' முன்னாள் அதிகாரியும் கடற்படை அதிகாரியுமான கார்கில் சுப்ரமணியம் தெரிவித்துள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு கார்கில் சுப்ரமணியம் அளித்த பேட்டி என இலங்கை ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

The body of Prabhakaran shown on TV was not him?

- இலங்கை அரசு காட்டியது பிரபாகரன் உடல் அல்ல. அது அவருடைய உடல்தான் எனில் முறையாக இறப்பு சான்றிதழ், மரபணு பரிசோதனை சான்றிதழ் வழங்காதது ஏன்?

- இலங்கையில் மரபணு சோதனை நடத்துவதற்காக பரிசோதனை வசதியே கிடையாது.

- இந்தியாவிடம் பிரபாகரன் மரணம் தொடர்பாக இலங்கை அளித்தது ஒரு "அறிக்கை" மட்டுமே...மரண சான்றிதழ் அல்ல.

- ஊடகங்களில் காட்டப்பட்ட உடலில் இருந்து மரபணு மாதிரிகள் எடுக்கப்பட்ட போதும் அதை இந்தியாவிடம் இலங்கை கொடுக்கவில்லை.

- இந்த மரபணு மாதிரி பற்றிய முடிவுகளை இலங்கை ஏன் வெளியிடவில்லை?

- அப்படியானால் பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறாரா?

- இறுதி யுத்தத்தின் சில நாட்களுக்கு முன்னரே பிரபாகரனின் மனைவி, மகள் இலங்கை ராணுவத்தால் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

- ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையுமாறு பிரபாகரனை இந்தியா கேட்டது.

- ஆயுதங்களை ஒப்படைக்காமல் போரிடுங்கள் என வைகோ, நெடுமாறன் ஆகியோர் கூறினர். இதனை பிரபாகரன் கேட்டதால் தோல்வி அடைந்தார்.

- ராஜபக்சேவின் தோல்விக்கு 'ரா'வின் பங்களிப்பு இருக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+