ரணில் கட்சியினருடன் சிறிசேனா திடீர் பேச்சுவார்த்தை.. இலங்கையில் புது குழப்பம்!
இலங்கை அதிபர் சிறிசேனா ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியின் 105 உறுப்பினர்களுடன் இன்று அதிகாலை திடீர் ஆலோசனை நடத்தினார்
கொழும்பு: இலங்கை அதிபர் சிறிசேனா ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியின் 105 உறுப்பினர்களுடன் இன்று அதிகாலை திடீர் ஆலோசனை நடத்தினார்
இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். இதையடுத்து நம்பிக்கையில்லை தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
ஆனால் அதற்கான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் ராஜபக்சே மூன்று முறை தோல்வி அடைந்தார்.

பெரிய குழப்பம்
இதையடுத்து ராஜபக்சேவும், ரணிலும் மாற்றி மாற்றி தங்களை பிரதமர் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இதனால் இலங்கையில் பெரிய அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. யார் பிரதமர் என்ற குழப்பம் நீடித்து வருகின்றது.

புதிய அறிவிப்பு
இந்த நிலையில் நேற்று அந்நாட்டு அதிபர் சிறிசேனா முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நபருக்கே பிரதமர் பதவி என்று குறிப்பிட்டார். அதன்படி வரும் 5ம் தேதி இலங்கையில் நாடாளுமன்றம் கூடும், அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பெரிய தீர்வு
மேலும் இதில் ராஜபக்சேவிற்கு எதிராக முறைப்படி நம்பிக்கையில்லா தீர்மானம் நடக்கும் என்றும் அவர் கூறினார். இந்த முடிவு ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஆதராவான முடிவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கையில் நாடாளுமன்றம் கலைப்பட்டதாக வெளியான அறிவிப்பும் இன்று வாபஸ் பெறப்பட்ட உள்ளது.

திடீர் ஆலோசனை
இந்த நிலையில் இலங்கை அதிபர் சிறிசேனா ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியின் 105 உறுப்பினர்களுடன் இன்று அதிகாலை திடீர் ஆலோசனை நடத்தினார். இதில் அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி உறுப்பினர்கள் சிலரும் இருந்தனர். ஆனால் இந்த கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications