"உக்கிர பைரவபுரம்"..... யாழ்ப்பாணத்தில் படமாக்கப்படும் முதல் த்ரில்லர் மெகா சீரியல்

Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம்: இலங்கையில் யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக "உக்கிர பைரவபுரம்" என்ற த்ரில்லர் மெகா சீரியலுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் ஐ.பி.சி. தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்துக்காக 'வணக்கம் தாய்நாடு', 'சர்வதேச புலனாய்வு' என்ற நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகிறார் கனடாவை சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர் ரிஷி.

அவரது தயாரிப்பில் தற்போது உருவாகிறது புதிய சஸ்பென்ஸ் த்ரில்லர் மெகா சீரியலான உக்கிர பைரவபுரம். இதற்கான முதல் கட்ட படப்பிடிப்பு யாழ்ப்பாணத்தில் தொடங்கியுள்ளது.

Ukkira Pairavapuram Tamil Television Serial at Jaffna

யாழ்ப்பாணத்தில் சிறிய கிராமம் ஒன்றில் யாருக்கும் புரியாமல் மர்மமாக நடைபெறும் சில விஷயங்கள்; யுத்தம் நடந்து தற்போது இலங்கை ராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பகுதியில் 22 வயதுப் பெண்ணுக்கு நினைவுக்கு வரும் 23 ஆண்டுகளுக்கு முந்தைய முற்பிறவி நினைவுகள்; யாழ்ப்பாணத்தில் யுத்தம் நடந்த காலத்தில் வெளிநாட்டு உளவுத்துறைகள் செய்த உளவு வேலைகள் என இந்த மூன்று புள்ளிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் உக்கிர பைரவபுரம் சீரியல் உருவாகிறது.

யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்படுகின்றன. வெளிநாட்டு உளவுத்துறைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள், அமெரிக்காவிலும் கனடாவிலும் படமாக்கப்பட இருக்கிறது.

உக்கிர பைரவபுரம் மெகா சீரியலின் அறிமுகக் காட்சி:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+