இலங்கையில் யு.எஸ். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்கெர்ரி! அதிபர், பிரதமருடன் ஆலோசனை!!
கொழும்பு: இலங்கையில் வருகை தந்துள்ள அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்கெர்ரி இன்று அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்புகளின் போது மனித உரிமைகள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா உதவ வேண்டும் என்று இலங்கை தரப்பில் கோரிக்க்கை முன்வைக்கப்பட்டது.
அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தலைமையிலான 35 பேர் கொண்ட குழு இன்று காலை கொழும்பு வந்தடைந்தது. கொழும்பு விமான நிலையத்தில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்கா குழுவினரை வரவேற்றார்.

இலங்கையில் புதிய அதிபராக பதவியேற்றுள்ள மைத்ரிபால சிறிசேன அரசுடன் இணைந்து செயல்படுவதற்காக ஜான் கெர்ரி இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இலங்கைக்கு 33 ஆண்டுகளுக்கு முன்னர் 1982ஆம் ஆண்டு அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வந்திருந்தார். அதன் பின்னர் தற்போதுதான் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வருகை தந்துள்ளார்.
2 நாள் பயணமாக வந்த கெர்ரி, அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சு நடத்தினார். அப்போது அதிபர் தேர்தலில் சிறிசேன வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் பிரதமர் ரணில், வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் கெர்ரி சந்தித்து பேசினார்.
இச்சந்திப்புகளின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்தும், இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய, எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications