விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழிக்க உதவியது யு.எஸ்: கோத்தபாய ராஜபக்சே

Subscribe to Oneindia Tamil

US support to defeat LTTE: Gotabaya Rajapaksa 

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழிக்க உதவியது அமெரிக்காதான் என்று இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

தி ஆஸ்திரேலியன் நாளிதழுக்கு கோத்தபாய அளித்த பேட்டியில், இலங்கை கடற்படையால் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்க முடிந்தது இறுதிப் போரில் ஒரு திருப்பமாக அமைந்தது. 2006க்கும் 2008க்கும் இடைப்பட்ட காலத்தில் 12 மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களை அழித்திருந்தோம்.

இதற்கு அமெரிக்காதான் எங்களுக்கு மிகமிக உதவியாக இருந்தனர். பெரும்பாலான கப்பல்களின் பயணம் குறித்து அமெரிக்காவே எங்களுக்கு தகவல் கொடுத்தது.

விடுதலைப் புலிகள் பெரும்பாலான ஆயுதங்களை வெளிச்சந்தையில் வாங்கினார்கள். பல ஆட்டிலறிகள் வடகொரியாவில் தயாரிக்கப்பட்டவை. அவர்கள் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் வைத்திருந்தனர்.

அவர்களிடம், இலங்கை இலங்கை இராணுவத்தை விடவும் அளவுக்கு அதிகமாக ஆயுதங்கள் இருந்தன.

புலிகளின் ஆயுதக்கப்பல்கள் இருக்கும் இடத்தை கண்டறிய அமெரிக்காவின் சேட்டிலைட் தொழில்நுட்படம் உதவியது. இதனால் இலங்கை கடற்படையால் அவற்றைத் தேடிச் சென்று தாக்க முடிந்தது.

நாங்கள் பெரும்பாலான ஆயுதங்களை இஸ்ரேலில் இருந்தும், பாகிஸ்தானிடம் இருந்துமே வாங்கினோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+