யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலுக்கு 2015-ல் மோடி போகாதது ஏன் தெரியுமா? முன்னாள் தூதர் ஷாக் தகவல்!
யாழ்ப்பாணம்: இலங்கைக்கு 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்ட போது புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தாதது ஏன் என்பது தொடர்பாக இலங்கைக்காக இந்தியாவின் முன்னாள் துணைத் தூதர் நடராஜன் இதுவரை வெளியாகாத தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இந்திய துணை தூதராக 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பணியாற்றியவர் ஏ.நடராஜன். From the Village to the Global Stage என்ற தலைப்பில் புதிய புத்தகம் ஒன்றை ஏ.நடராஜன் எழுதி உள்ளார். இந்தப் புத்தகம் விரைவில் கோவையில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் புத்தகத்தில் பிரதமர் மோடியின் யாழ்ப்பாண பயணம் தொடர்பான பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

மோடி வழிபாடு நடத்தாதது ஏன்?: அந்தப் புத்தகத்தில் ஏ.நடராஜன் எழுதியிருப்பதாவது: பிரதமர் மோடியின் யாழ்ப்பாணம் பயணத்தின் போது நல்லூர் கோவில் அல்லது மாவிட்டாபுரம் கந்தசாமி கோவில் அல்லது காங்கேசன்துறை நகுலேஸ்வரன் கோவிலுக்கு அழைத்துசெல்ல திட்டமிடப்பட்டது. இது தொடர்பாக நல்லூர் கோவில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி குமாரதாச மாப்பன முதலியாருடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது. அப்போது, கோவிலுக்குள் மேலாடை அணியாமல்தான் செல்ல வேண்டும்; குறிப்பிட்ட நேரத்தில்தான் கோவில் நடை திறக்கப்படும் என்கிற மரபுகளில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது என நல்லூர் தேவஸ்தான அதிகாரி திட்டவட்டமாக கூறிவிட்டாராம். இதனால் நல்லூர் முருகன் கோவிலுக்கு பிரதமர் மோடியால் செல்ல முடியவில்லை. ஆனால் காங்கேசன்துறை நகுலேஸ்வரன் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். அப்போது 98 வயதான நகுலேஸ் குருக்கள் உடனிருந்தார். தற்போது அவர் காலமாகிவிட்டார். இவ்வாறு ஏ.நடராஜன் பதிவிட்டுள்ளார்.

இலங்கையும் இந்திய பிரதமர்களும்: பிரதமர் மோடி இலங்கைக்கு 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 13,14-ந் தேதிகளில் பயணம் மேற்கொண்டார். அரசு முறை பயணமாக 27 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடி. 1987-ம் ஆண்டு இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை சென்றார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. அந்த பயணத்தின் போது இலங்கை கடற்படை வீரர் ஒருவரால் ராஜீவ் காந்தி தாக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது. 2008-ல் சார்க் மாநாட்டில் பங்கேற்க அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் சென்றிருந்தார். ஆனால் அது இலங்கைக்கான தனிப்பட்ட அரசு முறை பயணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications