1.5 மீட்டர் கேப் விட்டு "என்ஜாய்" பண்ணுங்க, முத்தம் ம்ஹூம்.. டாக்டர்கள் அறிவிப்பால் மக்கள் குழப்பம்
சிட்னி: 1.5 மீட்டர் சமூக இடைவெளி விட்டு உடலுறவு வைத்துக் கொள்ளுங்கள் என ஆஸ்திரேலிய நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு முதல் இந்த உலகை விட்டு போகாமல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள புதிய முறை வாழ்வியலை நாம் மேற்கொண்டு வருகிறோம்.
அதாவது பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியுடன் மற்றவர்களுடன் பழக வேண்டும். யாருடனும் கைகுலுக்கக் கூடாது.

இடைவெளி
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் பெட்ரூமிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. பெட்ரூமில் எப்படி சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது என யோசிப்பது எங்களுக்கு புரிகிறது.

சுகாதாரத் துறை
இதற்கான வழியையும் ஆஸ்திரேலிய நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். கொரோனா பரவாத அளவுக்கு பாதுகாப்பாக எப்படி உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி அவர்கள் நடந்து கொண்டால் விந்தணுக்கள் மூலமாகவும் கொரோனா பரவாதாம்.

உடலுறவு
கொரோனா காலத்தில் உடலுறவு வைத்து கொள்வது தவறில்லை. அதே நேரத்தில் மூச்சுக் காற்றில் நீர்த் துகள்கள் மூலமாகவும் எச்சில் மூலமாகவும் நோய் பரவலாம் என்பதால் உடலுறவின்போது 1.5 மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவர்கள்
இந்த அறிவிப்பால் பலர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அது எப்படி சமூக இடைவெளியுடன் உடலுறவு வைத்து கொள்வது? என கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து அந்த நாட்டின் மருத்துவர்கள் சிலர் விளக்கமளித்துள்ளனர். பாதுகாப்பான உடலுறவு என்றால் சுயஇன்பம்தான் சரி என்று ஒரு மருத்துவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு மாஸ்க்
மற்றொருவரோ உடலுறவின்போது முத்தம் வேண்டாம் என்றும் இன்னொரு மருத்துவரோ உடலுறவின் போது மூன்றடுக்கு பாதுகாப்பு மாஸ்கை அணிந்து கொள்ள வேண்டும் என்று விளக்கமளித்துள்ளார். தங்கள் இணையை தவிர்த்து காசு கொடுத்து யாருடனும் செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இருப்பதால் மக்கள் மீண்டும் குழம்பியுள்ளனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications