நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு "கடிவாளம்".. இதெல்லாம் தேவையில்லாத குழப்பம்.. தமிழக அரசு புது அதிரடி
சென்னை: நகராட்சி நிர்வாக இயக்குனரகம், அனைத்து நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு, ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.. இதுகுறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருக்கவும், மக்கள் ஓய்வெடுக்க சில பசுமையை வழங்கவும் திறந்தவெளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது முக்கியமாக பொழுதுபோக்கு மற்றும் சமூக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும், இந்த ஒதுக்கப்பட்ட இடங்களில் பூங்காக்கள், விளையாட்டுப் பகுதிகள் போன்றவை கட்டப்படுகின்றன.

விதிமுறைகள்: ஒரு திறந்தவெளி முன்பதிவுக்கு 10 மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட பரிமாணமும் 100 சதுர மீட்டருக்கும் அதிகமான அளவும் இருக்க வேண்டும். அதேபோல, தற்போதைய விதிமுறைகளின்படி, திறந்தவெளிக்கான பரப்பளவு நிலப்பரப்பில் 10 சதவீதம் இருக்க வேண்டும்.
அந்தவகையில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியாரால், குடியிருப்பு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவைகளில், 1.07 லட்சம் சதுர அடிக்கு மேற்பட்ட திட்டங்களில், 10 சதவீத நிலங்களை, உள்ளாட்சிகளிடம் ஒப்படைப்பது கட்டாயம். இந்த நிலங்களை, உள்ளாட்சி அமைப்புகள், பூங்கா, சிறுவர் விளையாட்டு திடல் அமைப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கடிவாளம்: ஆனால், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள், இந்த நிலங்களை, வேறுவகையான தேவைகளுக்கு பயன்படுத்துவதாக சமீபகாலமாகவே, புகார்கள் கிளம்பி உள்ளனவாம். இதற்கு கடிவாளம் போடுவதற்காகவே, அனைத்து நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு, நகராட்சி நிர்வாக இயக்குனரகம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், "பொது பயன்பாட்டுக்கென்று ஒதுக்கப்படும், ஓஎஸ்ஆர் நிலங்களை, பூங்கா, சிறுவர் விளையாட்டு திடல் அமைப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். எந்த நோக்கத்துக்காக, இந்த நிலங்கள் ஒப்படைக்கப்பட்டதோ, அந்த நோக்கத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொதுமக்களின் கோரிக்கை, மன்ற தீர்மானம் என்ற அடிப்படையில், இந்த நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற அனுமதி கோரும் முன்மொழிவுகள் நிராகரிக்கப்படுகின்றன.
முன்மொழிவுகள்: இருப்பினும், பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள் இதற்கான முன்மொழிவுகளை மீண்டும் மீண்டும் அனுப்புகின்றன. இது, தேவையில்லாத குழப்பங்களுக்கு வழி வகுப்பதாக உள்ளது. எனவே, நகராட்சிகள், மாநகராட்சிகள் இது தொடர்பான முன்மொழிவுகளை அனுப்புவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்" என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications