தேர்தலை அமைதியாக நடத்த 1,400 பறக்கும் படைகள் தயார்: டி.ஜி.பி. அனுப் ஜெயிஸ்வால்!
சென்னை: தமிழகத்தில் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்திட 1,400 பறக்கும் படைகள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக தேர்தல் டி.ஜி.பி. அனுப்ஜெயிஸ்வால் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
''மத்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடந்திட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
1400 பறக்கும் படைகள்
லோக்சபா தேர்தலுக்காக 1,400 பறக்கும் படைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளன.
பறக்கும் படை உள்ளிட்ட அமைப்புகளில் மாநில போலீசார், மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
நடத்தை விதிமுறைகள்
இவர்கள் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடந்திட உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதல்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கட்டுப்பாட்டு அறை
யாராவது தேர்தல் விதிமுறையை மீறி நடந்தால், உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். மாவட்ட அளவில் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகாரை அனுப்பலாம்.
புகார் தெரிவிக்க
சென்னையில் தேர்தல் டி.ஜி.பி. அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு, 044-28441707, 044-28441507, 044-28441807 என்ற தொலைபேசி எண்களிலும் பேசி புகார்களை பதிவு செய்யலாம்.
ஒத்துழைப்பு கொடுங்க
தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடந்திட, அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications