ரெஸ்யூமில் பொய் சொல்லி இருக்கிறார்களா.. ஜெயில்ல வேலை கொடுப்பாங்க.. அதிர்ச்சி ரிப்போர்ட்
வேலை தேடும் நபர்களில் ஆறில் ஒருவர் தங்கள் ரெஸ்யூமில் பொய் சொல்வதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
டெல்லி: வேலை தேடும் நபர்களில் ஆறில் ஒருவர் தங்கள் ரெஸ்யூமில் பொய் சொல்வதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. சாதாரண தகவல்களை கூட மறைத்து சிலர் பொய் சொல்வதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
மேலும் இது போன்ற தவறான தகவல்கள் அளிக்கும் நபர்களுக்கு சிறை தண்டையும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதன்படி கடுமையான பல தண்டனைகள் இந்த குற்றத்திற்கு வழங்கப்படலாம்.
இது போன்ற பொய்யான தகவல்களை அளித்து பலர் இதற்கு முன்பே வேலைக்கு சேர்ந்து இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு
இந்தியாவில் வேலை தேடும் நபர்களில் பலர் தங்கள் ரெஸ்யூமில் பொய் சொல்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. டெல்லியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஆறில் ஒருவர் தங்கள் ரெஸ்யூமில் பொய் சொல்லி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் 10,000 க்கும் அதிகமானோர் இதன் மூலம் வேலை பெறுவதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

சம்பளம் வாங்குவதில் பொய்
இதில் அதிகபட்சமாக பலர் பழைய சம்பளம் குறித்த தகவல்களில் பொய் சொல்லி இருக்கின்றனர். மேலும் கல்வி சார்ந்த தகவல்களில் பலர் பொய் சொல்லி உள்ளனர். 4 சதவிகிதம் பேர் பொய்யான கல்வி தகுதியையும் 6 சதவிகிதம் பேர் பொய்யான விலாசத்தையும் அளித்துள்ளனர். மேலும் கிட்டத்தட்ட 1 லட்சத்தில் 5 ஆயிரம் பேர் பொய்யான பேன் கார்ட், ஆதார் கார்ட், ரேஷன் விபரங்களை அளித்துள்ளனர்.

நிறுவனம்
இந்த நிலையில் எந்த மாதிரியான நிறுவனங்களில் இது போன்ற பொய்யான தகவல்கள் அளிக்கப்படுகிறது என்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக பைனான்ஸ் நிறுவனங்களில் 23.99 சதவிகிதமும், டெலிகாம் நிறுவங்களின் 23.44 சதவிகிதம் பேரும் ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஐடி நிறுவனங்களில் 8.25 சதவிகிதம் பேர் இது போல பொய் சொல்லி உள்ளனர்.

தண்டனை என்ன
இந்த நிலையில் இது போன்ற தவறுகளுக்கு என்ன தண்டனை என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இந்திய குற்றவியல் தடை சட்டத்தின் படி 5 வருடம் வரை தண்டனை அளிக்கப்படலாம். மேலும் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். முக்கியமாக அதன்பின் எங்கும் வேலை தேட முடியாதபடி குற்றம் செய்த நபரின் தகவல்கள் 'பிளாக்' செய்யப்படும். மேலும் தற்போது பொய்யான தகவல்கள் மூலம் வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு இதே தண்டனை வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications