ஜெ.வை சந்திக்க விரும்புகிறேன்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் சென்னையில் இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதை விவரித்துள்ளார். இதனால்தான் ராஜபக்சேவை மோடி அரசு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தலாய்லாவை சீனா அகற்றியது; ஆப்பிரிக்கா, இஸ்லாமிய நாடுகளில் தலைவர்களை அமெரிக்கா அகற்றியது போன்றவை முன்னுதாரணம்.
மூத்த தமிழ்க் குடிமகன் என்ற அடிப்படையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தேன். இதில் எந்த ஒரு அரசியலும் கிடையாது.
அதேபோல் சங்கரய்யா போன்ற இடதுசாரித் தலைவர்களையும் சந்திக்க விரும்புகிறேன்.
என்னைவிட ஒரு வயது மூத்தவரான ஜெயலலிதாவையும் சந்திக்க விரும்புகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் அவர் என்னை சந்திக்க விரும்புவாரா எனத் தெரியவில்லை.
என்னைவிட பல வயது மூத்தவரான வைகோவையும் சந்திப்பேன். எனது அருமை நண்பர் விஜயகாந்தையும் சந்திப்பேன்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.