வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்காக விரைவில் 10,000 வீடுகள்... ஒ.பி.எஸ் அறிவிப்பு
சென்னை: வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்காக விரைவில் 10,000 வீடுகள் கட்டித் தரப்படும் என்று மாநில நிதியமைச்சர் ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கலந்து கொண்டார். திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுத்துறை வங்கி சார்பில் தலா ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கினார். இந்த விழாவில் மாநில நிதி அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர்..

நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அடையாறு கூவம் ஆற்றங்கரையில் வீடுகளை இழந்த 10 ஆயிரம் பேருக்கு புதிய வீடுகள் கட்டி தரப்படும். முதல்வரின் உத்தரவு படி அனைத்து பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது.
சிறு தொழில்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உரிய ஏற்பாடு செய்து வருகிறார். பயிர்க்கடன், விவசாயிகள் கடன், வீட்டுக்கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வீட்டு உபயோக பொருட்களை இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் சலுகை கடன் வழங்கப்படும். மழை, வெள்ளத்தின் போது மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையின் உதவியோடு பலர் காப்பாற்றப்பட்டனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மனித உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கிய 19.63 லட்சம் பேர் மீட்கப்பட்டு 7500 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, தங்க வைக்கப்பட்டனர். .பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் 15 மண்டலங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழககத்தில் வெள்ள சேத மதிப்பீட்டை ஆய்வு செய்ததில் ரூ.8401 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி வழங்கி உள்ளது. சேத விவரங்கள் மீண்டும் கண்கிடப்படுகிறது. கூடுதல் அறிக்கை மத்திய அரசிடம் கொடுக்கப்படும் என்று கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications