சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 10 சிறுவர்கள் தப்பியோட்டம்.. ஒருவன் சிக்கினான்.. மதுரையில்!
மதுரை: மதுரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளி சிறையிலிருந்து 10 குற்றவாளிகள் நள்ளிரவில் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தப்பியோடிய 10 சிறுவர்களில் ஒருவர் பிடிபட்டுள்ளார். அந்த சிறுவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட சிறுவன் மதுரை பி.பி குளத்தைச் சேர்ந்தவன் என கூறப்படுகிறது. மேலும் 9 பேரை தெப்பக்குளம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அந்த சிறுவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட சிறுவன் மதுரை பி.பி குளத்தைச் சேர்ந்தவன் என கூறப்படுகிறது. மேலும் 9 பேரை தெப்பக்குளம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மதுரை காமராஜர் சாலையில் சிறுவர்களுக்கான சிறை உள்ளது. இதில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள் அடைக்கப்பட்டு வருகிறார்கள். இந்தச் சிறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.
குற்றவழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மதுரை, சிவகங்கை ஆகிய பகுதியை சேர்ந்த சவுந்தரராஜா, செல்வம், விக்னேஸ்வரன், கார்த்திக், பிச்சைமணி, ஆதிபரமேஸ்வரன், யாசின் முகமது, பாலாஜி, மணிகண்டன், தீபக்ராஜா ஆகிய 10 சிறுவர்கள், நேற்று நள்ளிரவில் ஜன்னல் கம்பியை வளைத்து அதன் வழியாக தப்பிச் சென்றது தெரியவந்தது.
இரவு முழுவதும் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ஒரு சிறுவன் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவனை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தபோது சிறையில் இருந்து தப்பிய பி.பி.குளத்தை சேர்ந்த பழனியாண்டி மகன் தீபக்ராஜா என தெரியவந்தது.
அவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்ற 9 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். ஒரே நேரத்தில் 10 சிறுவர்கள் சிறை ஜன்னலை வளைத்து தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சிறார் சிறையில் இருந்து சிறுவர்கள் தப்பித்து செல்வதும், பின்னர் அவர்களை போலீசார் பிடித்து மீண்டும் சிறையில் அடைப்பதும் வாடிக்கையான ஒன்றாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட 5 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தப்பி ஓடியபோது போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications