இடார்சி ரயில் நிலைய தீவிபத்து எதிரொலி - தொடர்ந்து ரத்தாகும் ரயில்கள்; பயணிகள் அவதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பிரதேச மாநிலம் இட்டார்சி ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 17 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய தொழில்நுட்ப சாதனங்கள் எரிந்து சேதமடைந்தது. இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் நடப்பதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளையும் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் நாளை தமிழகம், கேரள வழியாக செல்லும் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

10 more trains cancelled tomorrow

நாளை ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்:

1. கயா-சென்னை எழும்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ்
2. ஹஸ்ரத் நிஜாமுதீன்-எர்ணாகுளம் மங்கள லட்சத்தீவு எக்ஸ்பிரஸ்
3. கோவை-ஹஸ்ரத் நிஜாமுதீன் கொங்கு வாராந்திர எக்ஸ்பிரஸ்
4. மதுரை -ஹஸ்ரத் நிஜாமுதீன் (வழி-எழும்பூர்) சம்பர்க் கிராந்தி வாரமிருமுறை எக்ஸ்பிரஸ்
5. மதுரை - சண்டிகர்/டேராடூன் (வழி-சென்னை சென்ட்ரல்) வாரமிருமுறை எக்ஸ்பிரஸ்
6. பாட்னா-பெங்களூர் (வழி-சென்னை சென்ட்ரல்) சங்கமித்ரா எக்ஸ்பிரஸ்
7. டெல்லி-சென்னை சென்ட்ரல் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்
8. சென்னை சென்ட்ரல் - டெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்
9. சென்னை சென்ட்ரல் -ஜம்மு தாவி அந்தமான் வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ்
10. கோரக்பூர் - திருவனந்தபுரம் (வழி-சென்னை சென்ட்ரல்) ராப்திஸ்கர் வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ்.

இதேபோல் நாளை மறுதினம் 12 ரயில்களும், 21 ஆம் தேதி 11 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தொடர் ரயில் சேவை ரத்தால் பொதுமக்களும், பயணிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+