ரெடிமேட் கடையில் சிலை கடத்தல்- 10 பேரை வளைத்துப் பிடித்த சென்னை போலீசார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை தியாகராய நகரில் 200 வருட பஞ்சலோக சிலையை கடத்த முயன்றதாக 10 பேர் கொண்ட கும்பலை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
தியாகராய நகரில் உள்ள ரெடிமேட் கடையில் சிலை கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் அந்த கடையில் 3 அடி உயரமுள்ள விநாயகர் பஞ்சலோக சிலையை கைப்பற்றினர்.
மேலும் கடையில் இருந்த ஒரு கிலோ போதை பொருளையும் கைப்பற்றினர். போதை பொருளின் சந்தை மதிப்பு வெளிநாட்டில் ரூபாய் 10 லட்சம் என கூறப்படுகிறது.
இந்த தகவலை செய்தியாளர்களை சந்தித்த சிலை கடத்தல் தடுப்பு காவல் பிரிவு ஐ.ஜி அசோக்குமார் தாஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications