டிஎன்பிஎஸ்சியில் காலியாக இருக்கும் 10 உறுப்பினர் இடங்கள்- தாமதமாகும் தேர்வு முடிவுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ள காரணத்தினாலேயே தேர்வு முடிவுகள் தாமதமாவதாக தெரியவந்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சியில் ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால், கடந்த சில மாதமாக 10 உறுப்பினர்கள் இடங்கள் காலியாக இருந்து வருகின்றது.

10 places of members not filled in TNPSC

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சியின் முன்னாள் தலைவரும், டிஎன்பிஎஸ்சியின் உறுப்பினருமான பாலசுப்பிரமணியன் பணி ஓய்வு பெறுகின்ற நிலையில் உறுப்பினர் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இதனால், தற்போது செல்வமணி, பன்னீர் செல்வம், குப்புசாமி ஆகிய 3 பேர் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடந்த வருடம் நடத்தப்பட்ட 6 வகையான தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ளது.

2 வகையான பதவிகளுக்கு இன்னும் தேர்வுகளே நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல 2013 ஆம் ஆண்டு குரூப் 1 பதவியில் அடங்கிய 79 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகளும் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+