ஆம்பூரில் விசாரணைக் கைதி மரணத்துக்கு எதிராக போராட்டம்- வன்முறை- 108 பேர் கைது!!
வேலூர்: ஆம்பூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 5 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் பூந்தோட்டம் பர்ணகாரத் தெருவைச் சேர்ந்த ஷாஜகான் மகன் ஷமில் அஹமத். பள்ளிகொண்டா குச்சிபாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் காணாமல் போனது தொடர்பாக, இவரை பள்ளிகொண்டா காவல் ஆய்வாளராக இருந்த மார்ட்டின் பிரேம்ராஜ் ஜூன் 15-ந் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்றார்.

விசாரணையின் இடையே உடல்நிலை பாதிக்கப்பட்ட ஷமில் அஹமத் சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மாலை இறந்தார். இதையடுத்து 500-க்கும் மேற்பட்டோர் ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நீதி கோரி போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில் 38 போலீசார் படுகாயமடைந்தனர். போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. விடிய விடிய பதற்றமான சூழல் நிலவியது. நேற்று பகலில்தான் இயல்பு நிலைமை திரும்பியது.
இச்சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி எம்.என்.மஞ்சுநாதா, ஏடிஜிபி டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்டோர் நேரில் விசாரணை நடத்தினர். வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வாணியம்பாடி கலால் ஆய்வாளராகப் பணியாற்றிய மார்ட்டின் பிரேம்ராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் சபாரத்தினம் உள்ளிட்ட 7 பேர் மீது குற்ற நடைமுறைச் சட்டப்பிரிவு 176 (1) கீழ் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அத்துடன் மார்ட்டின் பிரேம்ராஜ் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்குமாறு வேலூர் குற்றவியல் நீதிபதி ஏ.மும்மூர்த்திக்கு, மாவட்ட முதன்மைக் குற்றவியல் நீதிபதி எஸ்.சிவகடாட்சம் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக 108 பேரை போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர். ஆம்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதித்துறை நடுவர் ஆனந்தராஜ் உத்தரவிட்டார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications