ஆம்பூரில் விசாரணைக் கைதி மரணத்துக்கு எதிராக போராட்டம்- வன்முறை- 108 பேர் கைது!!
வேலூர்: ஆம்பூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 5 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் பூந்தோட்டம் பர்ணகாரத் தெருவைச் சேர்ந்த ஷாஜகான் மகன் ஷமில் அஹமத். பள்ளிகொண்டா குச்சிபாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் காணாமல் போனது தொடர்பாக, இவரை பள்ளிகொண்டா காவல் ஆய்வாளராக இருந்த மார்ட்டின் பிரேம்ராஜ் ஜூன் 15-ந் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்றார்.

விசாரணையின் இடையே உடல்நிலை பாதிக்கப்பட்ட ஷமில் அஹமத் சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மாலை இறந்தார். இதையடுத்து 500-க்கும் மேற்பட்டோர் ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நீதி கோரி போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில் 38 போலீசார் படுகாயமடைந்தனர். போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. விடிய விடிய பதற்றமான சூழல் நிலவியது. நேற்று பகலில்தான் இயல்பு நிலைமை திரும்பியது.
இச்சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி எம்.என்.மஞ்சுநாதா, ஏடிஜிபி டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்டோர் நேரில் விசாரணை நடத்தினர். வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வாணியம்பாடி கலால் ஆய்வாளராகப் பணியாற்றிய மார்ட்டின் பிரேம்ராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் சபாரத்தினம் உள்ளிட்ட 7 பேர் மீது குற்ற நடைமுறைச் சட்டப்பிரிவு 176 (1) கீழ் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அத்துடன் மார்ட்டின் பிரேம்ராஜ் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்குமாறு வேலூர் குற்றவியல் நீதிபதி ஏ.மும்மூர்த்திக்கு, மாவட்ட முதன்மைக் குற்றவியல் நீதிபதி எஸ்.சிவகடாட்சம் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக 108 பேரை போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர். ஆம்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதித்துறை நடுவர் ஆனந்தராஜ் உத்தரவிட்டார்.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications