தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு சென்னையில் 10ஆம் நாள் நினைவு அஞ்சலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு சென்னையில் 10ஆம் நாள் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு சென்னையில் 10ஆம் நாள் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரண்டு நாட்கள் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நேற்று சென்னையில் 10ஆம் நாள் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது மெழுகுவர்த்தி ஏற்றி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ், கார்த்திகேயன், விஎல்சி ரவி மார்கெட் ராஜா, வீரமாணிக்கம் சிவா, சென்னை நாடார் சங்க செயலாளர் இன்ஜினியர் டி விஜயகுமார் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications