For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: நடந்து முடிந்த பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி முதல், ஏப்ரல் 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதனை மாணவர்கள், மாணவிகள், தனித்தேர்வர்கள், திருநங்கைகள், சிறைக்கைதிகள் என மொத்தம் 10 லட்சத்து ஆயிரத்து 140 பேர் எழுதியிருந்தனர்.

10th std Public exam results release tomorrow at 9.30 am.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தபடி, இந்த தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் அனைத்தும் முடிவுற்றதுடன், மதிப்பெண்கள் பட்டியல் மீண்டும் சரிபார்க்கப்பட்டு, அவைகள் இணையதளத்தில் பதிவேற்றமும் செய்து முடிக்கப்பட்ட நிலையில், நாளை காலை 9.30 மணிக்கு இந்த முடிவுகள் வெளியாக உள்ளன.

www.dge.tn.nic.in, மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

English summary
Tamilnadu and Puducherry, 10th grade general elections were held from March 16 to April 20. The results will be released tomorrow at 9.30 am. Examination results can be found at www.dge.tn.nic.in, and www.dge.tn.gov.in.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X