சென்னையில் ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் 11 பேர் பதுங்கல்- கூண்டோடு வளைக்க போலீஸ் மும்முரம்!
சென்னையில் பதுங்கி உள்ள 11 ஐஸ் இயக்க ஆதரவாளர்களை கூண்டோடு வளைக்க போலீஸ் கண்காணித்து வருகின்றனர்.
சென்னை: சென்னையில் பதுங்கி இருக்கும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை கூண்டோடு வளைக்க போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
ராஜஸ்தானில் ஜமீல் என்பவரை தீவிரவாத தடுப்பு போலீசார் கைது செய்யப்பட்டனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை இளைஞர்கள் பலரும் தம்முடன் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து சென்னை மண்ணடியைச் சேர்ந்த ஹாரூண் ரஷீத் என்பவரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர். தற்போது சென்னையைச் சேர்ந்த மேலும் 3 பேர் ஆஜராக ராஜஸ்தான் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இதனிடையே சென்னையில் மட்டும் ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் 11 பேர் பதுங்கி இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். இவர்கள் அடையாளம் காணப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் போலீஸ் நடத்தப் போகும் விசாரணையில் இது உறுதி செய்யப்பட்டால் 11 பேரையும் கூண்டோடு 'தூக்க' திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் கைது நடவடிக்கை தொடரும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications