ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சட்டப்போராட்டம் தொடரும்.. ஸ்டாலின் திட்டவட்டம்
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரிய வழக்கில் சட்டப்போராட்டம் தொடரும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரிய வழக்கில் சட்டப்போராட்டம் தொடரும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் எம்எல்ஏக்களாக நீடிக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

திமுக தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நீதித்துறையில் உள்ள நம்பிக்கையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறினார்.
சபாநாயகருக்கு அறிவுறுத்த முடியாத நிலையில், எதற்காக மனுக்களை நீதிமன்றம் விசாரித்தது? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும் 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கில் சட்டப் போராட்டம் தொடரும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications