Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேகம் எடுக்கும் 11 வகையான வைரஸ் காய்ச்சல்! இன்ஃபுளூயன்சா, டெங்கு அலர்ட் மக்களே

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாடு: மழைக்காலம் பரவலாக தொடங்கி இருப்பதால், 11 வகையான வைரஸ் காய்ச்சல் மிகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றி இரண்டு மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

பருவ மழைக் காலம் தொடங்கி இருப்பதால், பல மாவட்டங்களில் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. டெங்கு உட்பட 11 வகையான வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதாகத் தெரியவந்துள்ளது. இன்ஃபுளூயன்சா, வைரல் ஃபீவர் போன்ற பல காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு மக்கள் அவதியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

dengue influenza

சாதாரணமாக உடல் வலிபோல தொடங்கும் இந்தக் காய்ச்சல் சில மணிநேரங்களில் ஆளை ஒட்டுமொத்தமாக முடக்கிப் போடும் அளவுக்கு தீவிர தன்மை அடைந்துவிடுகிறது. எனவே உடல் சோர்வு அல்லது மூட்டு, கை கால் வலி வருவதை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

சாதாரண காய்ச்சல் என மருந்துக் கடைகளில் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுவிட்டு, அலட்சியமாக இருப்பது பல ஆபத்துகளை உருவாக்கலாம். டெங்கு போன்ற காய்ச்சல்களின் அறிகுறியாகக் கூட இது இருக்கலாம். சிலருக்குக் காய்ச்சல் அதிகம் இல்லாமல் உடல் சோர்வு மட்டுமே கூட வரலாம். அதுவும் டெங்கு அறிகுறியாக இருக்கலாம். மருந்துக் கடைகளில் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு, கவனக் குறைவாக இருப்பது மிகமிக ஆபத்தானது. காரணம், சில மணிநேரங்களிலேயே முழு உடல் செயல்படமுடியாத அளவுக்கு முடக்கப்பட்டுவிட்டும். ரத்த அணுக்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைய ஆரம்பித்துவிடும்.

சருமத்தில் ஏதோ ஒருவிதமான எரிச்சல் உணர்வு, தலைவலி, உடல்வலி, நெஞ்சு பாரம் ஆகிய எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரை ஆரம்ப நிலையிலேயே அணுகுவது நல்லது. சகட்டு மேனிக்குப் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் பற்றி பேசிய டாக்டர் ஜே.கே.ரெட்டி, "பல காலமாகவே இந்த மாதிரியான வைரஸ் காய்ச்சல்கள் இருக்கின்றன. இப்போது நாம் பரிசோதனை மூலம் மிகத் தெளிவாக என்ன வகையான காய்ச்சல் என்பதைக் கண்டுபிடித்துவிடுகிறோம். அதற்காக நவீன பரிசோதனைகள் வந்துவிட்டன.

இந்தப் பருவ கால காய்ச்சல்கள் 90% குணபடுத்தக் கூடியவைதான். ஆகவே, மக்கள் பயம் கொள்ளக் கூடாது. இந்த வைரல் காய்ச்சல்கள்தான் தொற்றும் குணம் கொண்டவை. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடியது.

dengue influenza

டெங்கு அப்படியல்ல. கொசுவினால் வரக்கூடியது. மழைக் காலம் தொடங்கிப் பல இடங்களில் நீர் தேங்கி இருக்கிறது. அதில் கொசு உற்பத்தியாக வாய்ப்புகள் அதிகம். எனவே வீட்டைச் சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவருக்குக் காய்ச்சல் வந்ததால் உடனடியாக அது என்ன வகையானது என்பதைக் கண்டறிய வேண்டும்.

மருத்துவரைப் பார்த்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவுகளில் சரியான கவனம் செலுத்துவது, வீட்டிலிருந்தபடியே தற்காத்துக் கொள்வது எப்படி? என்பதை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஹைட்ரேஷன் முக்கியம். சரியான அளவில் பாராசிட்டமின் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்ஃபுளூயன்சா வைரஸ் ஒரு பொதுவானதுதான். இது கொரோனா மாதிரி பரவக்கூடிய வைரஸ்தான். வெளிநாடுகளில் கூட ஆண்டுக்கு ஒருமுறை புளூ வைரஸ்க்கு என தனித் தடுப்பூசி போடுகிறார்கள். இந்த வைரஸ் குழந்தைகளைத் தாக்கினால், நிமோனியா வர வாய்ப்பு உள்ளது. சுவாச பிரச்சினைகள் உண்டாகலாம். பெரியவர்களுக்கு உடல் வலி இருக்கும். சிலருக்கு வயிற்றுப் போக்கு ஏற்படலாம்" என்கிறார்

மேலும் இது பற்றி டாக்டர் அஸ்வின் விஜய் சில விளக்கங்களை அளித்துள்ளார். அவர், "H3N2 இன்ஃபுளூயன்சா வைரஸ் காய்ச்சல் வந்தால், ஒரு வாரம் முதல் 3 வாரங்கள் வரை தொடர்ந்து நீடிக்கலாம். அதன் பாதிப்பு தொடர்ந்து காணப்படும். அச்சப்படும் அளவுக்கு உயிர்க்கொல்லி அல்ல. இருந்தாலும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது நல்லது. ஏனென்றால், பாதிப்பு என்பது அதிகம் உள்ளது.

காய்ச்சல் நிறைய நாட்கள் நீடிக்கிறது. சளி தொந்தரவும், தொண்டை வலியும் கூட சில நாட்கள் நீடிக்கலாம். பாராசிட்டமால் எடுத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் சி மாத்திரைகள் சாப்பிடுவது நல்லது. நிறையப் பழங்களைக் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள் நிறையச் சாப்பிடவேண்டும்" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+