பிளஸ் டு, எஸ்எஸ்எல்சி: 12 லட்சம் மாணவ மாணவியருக்கு தேர்வுக் கட்டணம் இல்லை
சென்னை: பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் மார்ச் 5ம்தேதி தொடங்கி 31ம் தேதியுடன் முடிகின்றன. எஸ்.எஸ்.எல்.சி வகுப்பு தேர்வுகள் மார்ச் 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிகின்றன.
பிளஸ் 2 தேர்வில் புதுச்சேரி மாநிலம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் உள்ள 6256 பள்ளிகளில்(பிளஸ் 2), 11827 பள்ளிகள்(எஸ்எஸ்எல்சி) படிக்கும் மாணவ மாணவியர் தேர்வு எழுதுவார்கள்.

பிளஸ் 2 தேர்வில் இரு மாநிலங்களில் இருந்தும் 8,43,064 மாணவ மாணவியர் எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் இரு மாநிலங்களை சேர்ந்த 10,72,691 மாணவ மாணவியரும் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில் 3,90,753 மாணவர்கள், 4,52,311 மாணவியர் எழுதுகின்றனர். வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவியரே அதிகம்.
எஸ்.எஸ்.எல். தேர்வில் 5,40,505 மாணவர்கள், 5,32,,186 மாணவியரும் எழுதுகின்றனர். இந்த ஆண்டு மாணவர்கள் அதிகம் எழுதுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு நடக்கும் போதெல்லாம், தமிழ் வழியில் (மீடியம்) படிக்கும் மாணவர்களுக்கு அரசு சலுகையாக தேர்வுக் கட்டணம் பெறப்படுவதில்லை. அதன்படி, இந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்பில் பள்ளிகள் மூலம் 5,56,498 மாணவ மாணவியரும், எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் பள்ளிகள் மூலம் 7,30,590 மாணவ மாணவியரும் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுத உள்ளதால் அவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரில் டிஸ்லெக்சியா பிரச்னை உள்ளவர்கள் முன்கூட்டியே தேர்வுத்துறைக்கு விண்ணப்பித்தால், அந்த மாணவர்கள் தேர்வு எழுதும் போது அவர்கள் சொல்வதை கேட்டு விடைத்தாளில் எழுத வசதியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். மாற்றுத் திறனாளிகள் இருந்தால் அந்த வகை மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தேர்வு மையங்களில் ரேம்ப் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்!












Click it and Unblock the Notifications