முதலாமாண்டு மாணவரை ராகிங் செய்த புகாரில் மருத்துவ மாணவர்கள் 12 பேர் சஸ்பென்ட்
சென்னை: முதலாமாண்டு மாணவரை ராகிங் செய்ததாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் நேற்று சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, மத்திய தொழிலாளர் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்துள்ள மாணவர் ஒருவரை இரண்டாமாண்டு மாணவர்கள் 12 பேர் சேர்ந்து ராகிங் கொடுமை செய்ததாகவும், இதனைத் தொடர்ந்து ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இது குறித்து மருத்துவமனை தரப்பினர் கூறுகையில், "மாணவர்களுக்குள் சிறிய பிரச்சினை ஏற்பட்டது. கல்லூரி நிர்வாகமே அதனை தீர்த்துவிட்டது. இதனை வெளியில் கூற இயலாது' என்றனர்.
ராகிங் தண்டனை என்ன?
கல்வி நிறுவனத்தில் இருந்து டிஸ்மிஸ் அல்லது சஸ்பெண்ட் செய்தல், விடுதியில் இருந்து நீக்குதல், தேர்வு முடிவை நிறுத்தி வைத்தல், தேர்வு எழுத தடை விதித்தல், ரூ.25 ஆயிரம் அபராதம் என குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனமே தண்டனை கொடுக்கலாம்.
காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், ஓராண்டு முதல் 7 ஆண்டுகள் வரை நீதிமன்றம் மூலம் தண்டனை கிடைக்கும்..
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications