முடிச்சூரில் பயங்கரம்! 13 வயது சிறுவனின் கழுத்தில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! தீவிர சிகிச்சை!
செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த முடிச்சூரில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியின் போது குறி தவறியதில் 13 வயது சிறுவன் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிரிக்கெட், புட்பால், வாலிபால், டென்னிஸ், டேபிள் டென்னிஸை போல் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பள்ளிகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்த பயிற்சியில் சேர 10 வயது முதல் சேர்க்கப்படுகிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூரில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 13 வயது சிறுவன் சித்தார்த் என்பவர் பயிற்சி பெற்றார். இன்று காலை வழக்கம் போல் பயிற்சிக்கு வந்த அவர் ஏர்கன்னில் இருந்து அலுமினியம் குண்டை லோடு செய்து தனது இலக்கை நோக்கி சுட்டார்.
அப்போது குறி தவறி பின்னோக்கிய அலுமினிய குண்டு சித்தார்த்தின் கழுத்தில் பாய்ந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த சித்தார்த்தை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கழுத்தில் இருந்த குண்டு நீக்கப்பட்டது.
தகவலறிந்த மணிமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த பயிற்சி பள்ளி அனுமதியின்றி நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications