கன்னியாகுமரியில் பேராசிரியையிடம் இருந்து 14 சவரன் தங்க சங்கிலி பறிப்பு
கன்னியாகுமரியில் பேராசிரியையிடம் இருந்து 14 சவரன் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.
Recommended Video

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பேராசிரியர் ஒருவரிடம் இருந்து 14 சவரன் மதிப்பிலான தாலி சங்கிலியை பைக்கில் வந்த இளைஞர்கள் பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
குழித்துறை நகரம் அருமனை பகுதியைச் சேர்ந்தவர் லிஜிதா. இவர் செவிலியர் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணி புரிந்து வருகிறார். இவர் பணி முடித்து விட்டு குழித்துறை நகரச் சந்திப்பின் வழியாக பேருந்து நிறுத்தத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது எதிரே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இரு நபர்கள் லிஜிதாவின் கழுத்தில் இருந்த 14 சவரன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு தப்பினர். எனினும் லிஜிதா விடாமல் துரத்தியும் அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். நகரின் மைய பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் கண் முன் நடந்த இந்த துணிகர செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications