For Daily Alerts
Just In
கோவில் திருவிழாவில் பிரச்சினை... 13 கிராமங்களில் 24ம் தேதி வரை 144 தடை உத்தரவு
புதுக்கோட்டை: கோவில் திருவிழாவில் பிரச்சினைகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை அருகே பதின்மூன்று கிராமங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், மாங்குடி அருகே கோவில் திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழாவில் பிரச்சினை ஏற்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே, மாங்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு போடப் பட்டுள்ளது.
இத்தடை உத்தரவு வரும் 24ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும், அப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
Comments
English summary
As to avoid violence in temple festival, the district administration has imposed section 144 in thirteen villages in Pudhukottai district.
Story first published: Monday, May 12, 2014, 9:45 [IST]