15,000 போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில்.... சென்னைக் கடலில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்
சென்னை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்திற்குப் பின் இன்று சென்னையில் கடலில் கரைக்கப்பட்டன. இதை முன்னிட்டு சென்னை முழுவதும் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் கடந்த வியாழனன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, பல விதமான பூஜைகளை மக்கள் மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று பின் கடலில் கரைப்பது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும், இந்த நிகழ்வை இந்து அமைப்புகள் கோலாகலமாக செய்து வருகின்றனர்.

2450 விநாயகர் சிலைகள்...
அதன்படி, இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னையில் 2,450 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவற்றை இன்று ஊர்வலமாக எடுத்துச் சென்று மக்கள் கடலில் கரைத்தனர்.

ஊர்வலம்...
இந்த ஊர்வலத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், சிலைகளை கரைக்கும் இடங்கள் குறித்தும் சென்னை போலீசார் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

விநாயகர் சதுர்த்தி...
இந்து முன்னணி, சிவசேனா, இந்து மக்கள் கட்சி, பாரத இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சென்னை மாநகரம் முழுவதும் 2,450 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, வழிப்பட்டு வந்தனர்.

கடலில் கரைக்க...
இவ்வாறு வைக்கப்பட்ட சிலைகளை இன்றுஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைத்து வருகின்றனர். இந்த விநாயகர் சிலை ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட பாதைகள் வழியாக கடற்கரைக்கு எடுத்துச்செல்லவேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

வடசென்னை...
வடசென்னையில் உள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும், முத்துசாமி பாலம் அருகே ஒன்று சேர்ந்து, அங்கிருந்து பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் கரைக்கப்பட்டு வருகிறது.

வள்ளுவர் கோட்ட சிலைகள்
வள்ளுவர்கோட்டத்தை சுற்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை, வள்ளுவர்கோட்டம் அருகேயும், திருவல்லிக்கேணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள், திருவட்டீஸ்வரன்பேட்டை அருகேயும் ஒன்று கூடி, அங்கிருந்து சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகின்றன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications