கள்ளக்குறிச்சி பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய மேலும் 5 பேர் கைது... 15 நாட்கள் சிறையிலடைப்பு!
கள்ளக்குறிச்சி : கனியாமூர் கலவரத்தில் பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய ஐந்து பேர், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளியில் பள்ளி மாணவி ஸ்ரீ மதி மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது பள்ளி வளாகத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்களைப் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி தீ வைத்துக் கொளுத்தினர். இதனிடையே கலவரம் தொடர்பான வழக்கு சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு குற்றவாளிகளை தொடர்ந்து அதிரடியாக கைது செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை தொடர்பாக இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளி கட்டிடத்தை சேதப்படுத்தியதாக ஒரே நாளில் 8 பேரை கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த அருண்குமார், கமல்ராஜ், ஸ்ரீதர், சின்னசேலம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, கடலூர் மாவட்டம் அன்னாவள்ளி பகுதியை சேர்ந்த பாலமூர்த்தி, சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் கார்த்தி, கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மணீஷ் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மொத்தமாக, 8 பேரை ஒரே நாளில் சிறப்பு புலனாய்வு போலிசார் அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர், அனைவரும் கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முகமது அலி முன்பு ஆஜர்படுத்தினார். தொடர்ந்து குற்றவாளிகளை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார்.
இதுவரை இந்த கலவரம் தொடர்பாக வீடியோ ஆதாரங்களை கொண்டு சிறப்பு புலனாய்வு குழு போலீசார் மொத்தமாக 10 நபர்களை கைது செய்துள்ளனர். தொடர்ந்து வீடியோ ஆதாரங்களை கொண்டு பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications