கள்ளக்குறிச்சி பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய மேலும் 5 பேர் கைது... 15 நாட்கள் சிறையிலடைப்பு!
கள்ளக்குறிச்சி : கனியாமூர் கலவரத்தில் பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய ஐந்து பேர், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளியில் பள்ளி மாணவி ஸ்ரீ மதி மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது பள்ளி வளாகத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்களைப் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி தீ வைத்துக் கொளுத்தினர். இதனிடையே கலவரம் தொடர்பான வழக்கு சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு குற்றவாளிகளை தொடர்ந்து அதிரடியாக கைது செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை தொடர்பாக இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளி கட்டிடத்தை சேதப்படுத்தியதாக ஒரே நாளில் 8 பேரை கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த அருண்குமார், கமல்ராஜ், ஸ்ரீதர், சின்னசேலம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, கடலூர் மாவட்டம் அன்னாவள்ளி பகுதியை சேர்ந்த பாலமூர்த்தி, சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் கார்த்தி, கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மணீஷ் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மொத்தமாக, 8 பேரை ஒரே நாளில் சிறப்பு புலனாய்வு போலிசார் அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர், அனைவரும் கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முகமது அலி முன்பு ஆஜர்படுத்தினார். தொடர்ந்து குற்றவாளிகளை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார்.
இதுவரை இந்த கலவரம் தொடர்பாக வீடியோ ஆதாரங்களை கொண்டு சிறப்பு புலனாய்வு குழு போலீசார் மொத்தமாக 10 நபர்களை கைது செய்துள்ளனர். தொடர்ந்து வீடியோ ஆதாரங்களை கொண்டு பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications