15 வயசு.. மாமன் மகள் மீது காதல்.. எதிர்ப்பு தெரிவித்த அத்தை.. மூச்சை நிறுத்திய சிறுவன்!
15 வயது சிறுவன் 35 வயது பெண்ணை கொலை செய்துள்ளான்.
சென்னை: 15 வயசு பையனுக்கு என்ன தெரிய போகுதுன்னு நாம நினைக்கிறோம். ஆனா இவர்களில் சிலர் பெரியவங்களவிட மிஞ்சி போயிடறாங்க. அப்படித்தான் ஒரு 15 வயசு பையன் லவ் பண்றான்.. இவன் கொலை செய்து சிக்கியும் உள்ளான்.
காதலுக்கு போதிய வயசு இல்லை. இதை சுட்டிக்காட்டித் தட்டி கேட்டார் என்பதற்காக சொந்த அத்தையையே போட்டுத் தள்ளி விட்டான் இந்த பையன்.
அமைந்தகரை வெள்ளாளர் தெருவை சேர்ந்த தம்பதி சங்கரசுப்பு -தமிழ்ச்செல்வி. சங்கரசுப்பு தன் வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு மளிகை கடை வைத்துள்ளார். வயது 44. தமிழ்ச்செல்விக்கு வயது 35. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கை தேர்ந்த கொலையாளி?
இந்நிலையில் கடந்த 2-ம் தேதி தமிழ்செல்வி வீட்டில் சடலமாக கிடந்தார். அதுவும் மிக கொடூரமான நிலையில் இருந்தார். அவரது கழுத்து நெறிக்கப்பட்டிருந்தது. கை மணிக்கட்டு நரம்பு அறுக்கப்பட்டிருந்தது. இதனால் பயங்கரமான ஒரு தேர்ந்த கொலையாளிதான் இதை செய்திருக்க கூடும் என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

சிக்கிய 15 வயது சிறுவன்
அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் விட்டுவைக்காமல் ஆய்வு நடவடிக்கையில் அதிரடியாக இறங்கினர். கடைசியில் பார்த்தால், 15 வயது சிறுவன் தமிழ்ச்செல்வியை கொலை செய்தது அந்த காமிராவில் தெரியவந்தது. அந்த சிறுவன் யார் என்றால் தமிழ்ச்செல்வியின் உறவுக்காரரின் மகனாம். கொலைக்கு என்ன காரணம் என்றால், தமிழ்ச்செல்வியின் மகளை 15 வயது சிறுவன் காதலித்து உள்ளார் (சிறுவனுக்கு தமிழ்ச்செல்வி அத்தை முறையாம்).

சிறுவன் கைது
அந்த காதல் தமிழ்ச்செல்விக்கு தெரியவந்ததால் சிறுவனை கண்டித்துள்ளார். அதனால் சிறுவனுக்கு ரோஷம் கொப்பளித்து, ஆத்திரம் அதிகமாகி, இப்படி கொடூரமான கொலையில் முடிந்திருக்கிறது. இப்போது படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

குட்டிச்சுவராக்கும் சமூகவலைதளம்
எல்லாம் இந்த டி.வி.யும், சமூகவலைதளங்களும் படுத்தற பாடுதான் இப்படி வன்முறையாக வெடித்து கிளம்புகிறது. இன்றைய பெருமளவு குழந்தைகளையும், மாணவர்களையும், மனதளவில் கெடுத்து குட்டிச்சுவராக்குவது அளவுக்கதிகமாக அலைபாய்ந்துகொண்டிருக்கும் ஆபாசதளங்களே. எனவே இளைய சமுதாயத்தை கெடுத்து சூறையாடி கொண்டிருக்கும் ஆபாசதளங்கள் மற்றும் வக்கரிக்கும் சினிமா, தொலைக்காட்சியின் எல்லைமீறிய காட்சிகளை தடுத்து நிறுத்த உடனடியாக அரசு முன் வரவேண்டும்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications