For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாரியம்மன் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்.. திருவாரூரில் பரபரப்பு

கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

Google Oneindia Tamil News

திருவாரூர்: திருவாரூர் அருகே கோயில் திருவிழாவில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் அருகே உள்ள கிராமம் குவளைக்கால். இங்குள்ள அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். இதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன.

வழிபாடுகள் முடிவடைந்ததையடுத்து, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை வாங்கி சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவர்களுக்கு திடீரென வாந்தி வந்தது. சிலர் மயங்கி கீழே விழுந்தனர். இதில் 150-க்கும் மேற்பட்டோர் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து பிரசாதம் சாப்பிட்டு பாதிப்பு ஏற்பட்டோர் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆடி வெள்ளியன்று பக்தர்கள் கோயில் பிரசாதம் சாப்பிட்டு மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
150 people admitted in hospital for temple prasatham near Thiruvarur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X