அந்தமான் படகு விபத்து: இறந்தவர்கள் 16 பேரின் உடல்கள் சென்னை வந்தன!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அந்தமானில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் 16 பேரின் உடல்கள் இன்று பிற்பகல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டன.
காஞ்சிபுரத்திலிருந்து டிராவல்ஸ் நிறுவனம் மூலம் அந்தமானுக்கு சுற்றுலா சென்றவர்கள் படகு விபத்துக்குள்ளானது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த அனுராதா, உஷா, அனுசுயா, கணபதி, துரை.ஜெயக்குமார், மணிகண்டன், சாந்தா பாய், பெருமாள் மேனாள் உட்பட 22 பேர் பலியாகினர்.

இன்று இவர்களது உடல்கள் அடையாளம் காணப்பட்டன. பின்னர் இன்று பிற்பகல் 2 தனித்தனி விமானங்களில் 16 பேரின் உடல்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. இந்த விமானங்களில் படகு விபத்தில் உயிர் தப்பி படுகாயமடைந்தவர்களூம் அழைத்து வரப்பட்டனர்.












Click it and Unblock the Notifications