10 பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 16 பேர் அதிரடி இடமாற்றம்... சென்னையில்
சென்னை: சென்னை நகரில் பத்து பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 16 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான உத்தரவை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பிறப்பித்துள்ளார்.
இதுவரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஆர்.மணிமேகலை வேப்பேரி மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராகவும், எப்.லூடா வடபழனி மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.சார்லஸ் சாம் ராஜதுரை வளசரவாக்கம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், ஜி.ராஜேஸ்வரி ராயப்பேட்டை மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராகவும், சி.முத்தேலு எஸ்.சி.பி. இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.தரணி ராஜமங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், ஏ.கண்ணகி மணலி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், இமாகுலேட் தேவோடா புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
எஸ்.லட்சுமி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டராகவும், ஜெ.அமல்ராஜ் பரங்கிமலை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், ஜெ.ஆனந்தராஜன் திருவொற்றியூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் 5 பேர் - அதில் மூவர் பெண்கள்
வேப்பேரி மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜெ.ஜமுனாராணி, வடபழனி மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் எஸ்.ரேகா, வளசரவாக்கம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கே.சேட்டு, ராயப்பேட்டை மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் என்.கே.வனிதா, திருவொற்றியூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜி.பிரபு ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications