தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 17 பொறியியல், எம்.பி.ஏ கல்லூரிகள் மூடல்!
வருகிற கல்வியாண்டில் 17 பொறியியல் மற்றும் எம்.பி.ஏ கல்லூரிகள் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : தமிழகத்தில் வருகிற கல்வியாண்டில் 17 பொறியியல் மற்றும் எம்.பி.ஏ., கல்லூரிகள் மூடப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் பொறியியல் படிப்பின் மீதான ஆர்வல் கடந்த சில வருடங்களாக படிப்படியாக குறைந்து வருகின்றன. ஏற்கனவே பொறியியல் படித்து முடித்த பலர் வேலை இல்லாமல் இருப்பதாலும், குறைந்த சம்பளமே கிடைப்பதாலும் பொறியியல் படிப்பின் மீது மாணவர்கள் ஆர்வம் இன்றி இருக்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேரும் எண்ணிக்கை ஆண்டுதோறும் படிப்படியாக குறைந்து வருகின்றன. ஆண்டுதோறும் நடக்கும் பொறியியல் கலந்தாய்வில் முக்கியமான கல்லூரிகளை மட்டுமே மாணவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இதனால் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் பொறியியில் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக கிடக்கின்றன. ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு சில தனியார் கல்லூரிகளில் ஒற்றை இலக்க அளவிலேயே மாணவர்கள் சேர்க்கை நடந்திருப்பதால் அக்கல்லூரிகளை வருகின்ற கல்வி ஆண்டில் நடத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனால் வருகிற கல்வியாண்டில் 17 பொறியியல் மற்றும் எம்.பி.ஏ கல்லூரிகள் மூடப்பட உள்ளன என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகையில், இந்த ஆண்டு 17 கல்லூரிகள் மூடப்பட உள்ளன. அதில் 12 தனியார் மொறியியல் கல்லூரிகள் மூடுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன.
அதே போல் 5 எம்.பி.ஏ. கல்லூரிகள் வருகிற கல்வி ஆண்டு பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கவில்லை. பாடப்பிரிவுகளுக்கு ஆண்டுதோறும் அனுமதி பெற வேண்டும். கடந்த 21ம் தேதி அங்கீகாரம் பெறுவதற்கு கடைசி நாளாகும்.
அதே நேரம், பொறியியல் கல்லூரிகள் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளிலும் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால், அந்த பாடப்பிரிவுகளையும் மூடுவதற்கு பல கல்லூரிகள் அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளன.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications