ஓபிஎஸ் உள்பட 16 அமைச்சர்களுக்கு "கங்கிராட்ஸ்".. மீண்டும் சீட் கிடைச்சிருச்சு!
சென்னை: நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட தற்போது அமைச்சர்களாக பதவி வகித்து வரும் 16 பேருக்கு மீண்டும் அதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைத்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
அதில், தற்போதைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களில், ஜெயலலிதா நீங்கலான 26 அமைச்சர்களில் 16 பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ்...
அதன்படி, நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த சட்டசபைத் தேர்தலிலும் ஓபிஎஸ் இதே தொகுதியில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பா.வளர்மதி...
இதேபோல், ஆயிரம்விளக்குத் தொகுதியில் சமூக நலம், சத்துணவுத் திட்டம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர். பா. வளர்மதி போட்டியிடுகிறார். இவருக்கும் பழைய தொகுதியே கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பத்...
கடலூர் மாவட்டச் செயலரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத்திற்கு கடலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தமுறையும் இதே தொகுதியில் போட்டியிட்டே அவர் வெற்றி பெற்றார்.

நத்தம் விஸ்வநாதன்...
இதேபோல், ஒரத்தநாடு தொகுதியில் அமைச்சர் ஆர் வைத்திலிங்கமும், விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரும் போட்டியிடுகிறார்கள். ஆத்தூர் தொகுதியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் ஆர். விசுவநாதன் போட்டியிடுகிறார்.

வேலுமணி...
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியிலும், தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பி. தங்கமணி குமாரபாளையம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

கோகுல இந்திரா...
இவர்கள் தவிர பொள்ளாச்சியில் ஜெயராமன், நன்னிலம் தொகுதியில் ஆர். காமராஜ், எழும்பூரில் பரிதி இளம்வழுதியும், பொன்னேரியில் பலராமன், கைத்தறி, துணி நூல் துறை அமைச்சர் கோகுல இந்திரா அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.

ராஜேந்திர பாலாஜி...
இதேபோல், எடப்பாடி தொகுதியில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், மதுரை மேற்கில் செல்லூர் மு. ராஜுவும், சிவகாசி தொகுதியில் ராஜேந்திர பாலாஜியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தோப்பு வெங்கடாச்சலம்...
பெருந்துறை தொகுதியில் அமைச்சர் தோப்பு வெங்கடாசலமும், திருமங்கலத்தில் ஆர்.பி.உதயகுமாரும், ஜோலார்பேட்டையில் கே.சி. வீரமணியும் களமிறங்குகின்றனர்.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications