"கிரேஸ் மார்க்" வழங்கப்பட்ட வேதியியல் தேர்வில் 1703 பேர் 200க்கு 200!
சென்னை: கடினமான வினாக்கள் இருந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட பிளஸ் 2 வேதியியல் தேர்வில் 1703 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை நடைபெற்றாது. இதில், மருத்துவம், பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்ய உள்ள மாணவர்களுக்கு முக்கியப் பாடமான வேதியியல் தேர்வு மார்ச் 14-ஆம் தேதி நடைபெற்றது.

இந்தத் தேர்வு மிகவும் கடினமானதாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கடினமாக கேள்விகள் சிலவற்றிற்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக வேதியியல் பாட ஆசிரியர்கள் தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவியை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பாடத் திட்டத்துக்கு வெளியே இருந்து கேட்கப்பட்டிருந்த ஒரு மதிப்பெண் வினா 17 (பி பிரிவு), அதேபோல, ஏ பிரிவில் 18, வினா எண் 70-இல் பி ஆகிய இரு வினாக்களுக்கும் மாணவர்கள் எந்த ஒரு பதிலை அளித்திருந்தாலும் அவர்களுக்கு முறையே 1, 5 மதிப்பெண்கள் வழங்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்தது.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து நெல்லை பேராசிரியர் சாமுவேல் ஆசீர்ராஜ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அதில் அவர், கருணை மதிப்பெண்கள் வழங்கக்கூடாது என்றும், இவ்வழக்கு முடிவுக்கு வரும் வரை, பிளஸ் 2 தேர்வு முடிவை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் விடுமுறை கால அமர்வு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து விசாரணையை ஜூன் மாதம் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த சூழ்நிலையில், இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், கடினமான வினாக்கள் இருந்ததாக கூறப்பட்டு, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட வேதியியல் தேர்வில் 1703 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டதால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.
இது தவிர இயற்பியலில் 5 பேரும், உயிரியலில் 775 பேரும், விலங்கியலில் 20 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications