"கிரேஸ் மார்க்" வழங்கப்பட்ட வேதியியல் தேர்வில் 1703 பேர் 200க்கு 200!
சென்னை: கடினமான வினாக்கள் இருந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட பிளஸ் 2 வேதியியல் தேர்வில் 1703 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை நடைபெற்றாது. இதில், மருத்துவம், பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்ய உள்ள மாணவர்களுக்கு முக்கியப் பாடமான வேதியியல் தேர்வு மார்ச் 14-ஆம் தேதி நடைபெற்றது.

இந்தத் தேர்வு மிகவும் கடினமானதாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கடினமாக கேள்விகள் சிலவற்றிற்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக வேதியியல் பாட ஆசிரியர்கள் தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவியை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பாடத் திட்டத்துக்கு வெளியே இருந்து கேட்கப்பட்டிருந்த ஒரு மதிப்பெண் வினா 17 (பி பிரிவு), அதேபோல, ஏ பிரிவில் 18, வினா எண் 70-இல் பி ஆகிய இரு வினாக்களுக்கும் மாணவர்கள் எந்த ஒரு பதிலை அளித்திருந்தாலும் அவர்களுக்கு முறையே 1, 5 மதிப்பெண்கள் வழங்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்தது.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து நெல்லை பேராசிரியர் சாமுவேல் ஆசீர்ராஜ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அதில் அவர், கருணை மதிப்பெண்கள் வழங்கக்கூடாது என்றும், இவ்வழக்கு முடிவுக்கு வரும் வரை, பிளஸ் 2 தேர்வு முடிவை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் விடுமுறை கால அமர்வு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து விசாரணையை ஜூன் மாதம் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த சூழ்நிலையில், இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், கடினமான வினாக்கள் இருந்ததாக கூறப்பட்டு, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட வேதியியல் தேர்வில் 1703 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டதால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.
இது தவிர இயற்பியலில் 5 பேரும், உயிரியலில் 775 பேரும், விலங்கியலில் 20 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications