"கிரேஸ் மார்க்" வழங்கப்பட்ட வேதியியல் தேர்வில் 1703 பேர் 200க்கு 200!
சென்னை: கடினமான வினாக்கள் இருந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட பிளஸ் 2 வேதியியல் தேர்வில் 1703 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை நடைபெற்றாது. இதில், மருத்துவம், பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்ய உள்ள மாணவர்களுக்கு முக்கியப் பாடமான வேதியியல் தேர்வு மார்ச் 14-ஆம் தேதி நடைபெற்றது.

இந்தத் தேர்வு மிகவும் கடினமானதாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கடினமாக கேள்விகள் சிலவற்றிற்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக வேதியியல் பாட ஆசிரியர்கள் தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவியை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பாடத் திட்டத்துக்கு வெளியே இருந்து கேட்கப்பட்டிருந்த ஒரு மதிப்பெண் வினா 17 (பி பிரிவு), அதேபோல, ஏ பிரிவில் 18, வினா எண் 70-இல் பி ஆகிய இரு வினாக்களுக்கும் மாணவர்கள் எந்த ஒரு பதிலை அளித்திருந்தாலும் அவர்களுக்கு முறையே 1, 5 மதிப்பெண்கள் வழங்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்தது.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து நெல்லை பேராசிரியர் சாமுவேல் ஆசீர்ராஜ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அதில் அவர், கருணை மதிப்பெண்கள் வழங்கக்கூடாது என்றும், இவ்வழக்கு முடிவுக்கு வரும் வரை, பிளஸ் 2 தேர்வு முடிவை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் விடுமுறை கால அமர்வு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து விசாரணையை ஜூன் மாதம் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த சூழ்நிலையில், இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், கடினமான வினாக்கள் இருந்ததாக கூறப்பட்டு, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட வேதியியல் தேர்வில் 1703 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டதால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.
இது தவிர இயற்பியலில் 5 பேரும், உயிரியலில் 775 பேரும், விலங்கியலில் 20 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications