புதுச்சேரியில் 179 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளது: மாநில வளர்ச்சி ஆணையர்
புதுச்சேரியில் 179 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரியில் புயலை எதிர்கொள்வதற்காக 179 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக மாநில வளர்ச்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவாகியுள்ள நாடா புயல் கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடா புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளனர். அதேபோல், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக களத்தில் தயார் நிலையில் உள்ளதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாடா புயலை எதிர்கொள்வது தொடர்பாக புதுச்சேரி மாநில அவசர கால செயல் மையத்தில் மாநில வளர்ச்சி ஆணையர் நரேந்திர குமார் தலைமையில் அனைத்து துறை கலந்து கொண்ட அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் காவல் துறை, பொதுப்பணித்துறை உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. கடலுக்கு சென்றிருப்பவர்களும் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே புதுச்சேரியில் 179 புயல் பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாநில வளர்ச்சி ஆணையர் நரேந்திர குமார் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications