அந்தமான் படகு விபத்தில் உயிரிழந்த காஞ்சியைச் சேர்ந்த 18 பேரின் அடையாளம் கண்டுபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: அந்தமானில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் 18 பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.

காஞ்சிபுரத்திலிருந்து ஒரு டிராவல்ஸ் நிறுவனம் மூலம் கீழ்க்கண்டோர் அந்தமானுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.

18 bodies of Andaman boat tragedy identified

சி.ஜெயபாலன் (66), ஜெ.பத்மினி (54), ஆர்.கஜேந்திரன் (51), ஜி.வள்ளி (47), ஆர்.கருணாகரன் (61), கே.வனஜா (49), கே.ஆர்.தியாகராஜன் (63), டி.அனுராதா (52), டி.துரைஜெயக்குமார் (61), ஜெ.அனுசியா (57), எஸ்.பெருமாள் (68), பி.மேனாள் (62), டி.செல்வராஜ் (64), எஸ்.அஞ்ஜலம் (58), எஸ்.மணிகண்டன் (35), ஜெ.உஷா (34), எம்.பூஜா (6), வி.சுரேஷ் ஷா (33), எஸ்.கங்கா (26), எஸ்.தர்ஷினி (7), எஸ்.வினோதினி (3), வி.சாந்தா (55), பி.சாந்திபாய் (50), ஜி.கணபதி (63), கே.கோபால் (53), கே.சிவானந்தம் (54), எம்.ப்ரீத்தி (25), ஆர்.குமரகுருநாதன் (31), பி.ரங்கநாதன் (62), ஆர்.சுசிலா (51), எஸ்.துரைராஜ் (45), கே.செல்வராஜ் (63).

இவர்கள் நேற்று ராஸ் தீவிலிருந்து நார்த் பே பகுதிக்கு படகில் சென்றபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்தப் படகில் மும்பையைச் சேர்ந்தவர்கள் சிலரும் இருந்தனர். மொத்தம் 45 பேர் அதில் பயணித்துள்ளனர்.

இந்த விபத்தில், காஞ்சிபுரத்தை சேர்ந்த அனுராதா, உஷா, அனுசுயா, கணபதி, துரை.ஜெயக்குமார், மணிகண்டன், சாந்தா பாய், பெருமாள் மேனாள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.

அவர்களின் உடல்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களது உடல்கள் விமானத்தில் கொண்டு வரப்படவுள்ளன. இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சென்னை விமான நிலையத்தில் முகாமிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+