18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கப்பட்ட வழக்கு விசாரணை.. ஜன.9ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கப்பட்ட வழக்கின் மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கப்பட்ட வழக்கின் மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதுனுடன் நிலுவையில் உள்ள தமிழக சட்டப்பேரவை தொடர்பான மீதமுள்ள 7 வழக்குகளின் விசாரணையும் ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவை சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். இதையடுத்து இந்த தகுதி நீக்கத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடக்கப்பட்டது. இதனுடன் இன்னும் 7 கூடுதல் வழக்குகளும் தொடரப்பட்டது.

18 MLA disqualification case adjourned to Jan-9

இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பு வாதம் கடந்த நவம்பர் 27ம் தேதி நடந்தது. இதனையடுத்து எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உள்ளிட்ட 8 வழக்குகள் டிசம்பர் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை வரை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியது.

இந்த நிலையில் இன்றைய விசாரணையின் முடிவில் இந்த வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கப்பட்டது உள்ளிட்ட 8 வழக்குகளின் மீதான விசாரணை ஜன.9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+