எதிர்ப்புப் பாடல்..தப்பாட்டம்..கும்மி.. வலுக்கும் நெடுவாசல் போராட்டம்… ஹைட்ரோ கார்பன் ரத்து எப்போது
தொடர்ந்து 18வது நாளாக புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இங்கு ஆடல், பாடல் என பல்வேறு வகையான எதிர்ப்பு வடிவங்களை மக்கள் அரங்கேற்றி தங்களது எதிர்
புதுக்கோட்டை: நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று 18 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் பாடல்கள், தப்பாட்டம், கும்மி என பல்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர் போராட்டக் குழுவினர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் நெடுவாசல் மக்கள்.
இந்தப் போராட்டத்தில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். விவசாய அமைப்பினர், ஐ.டி. துறையினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கும்மியடித்து…
நெடுவாசல் போராட்டத்தில் பெண்கள் கைக் குழந்தைகளுடன் அதிக அளவில் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கூடி இருக்கும் பெண்கள் கும்மியையும், பாடல்களையும் தங்களது எதிர்ப்பு வடிவமாக மாற்றியுள்ளனர். பெண்கள் ஆவேசமாக போராட்டப் பாடல்களை பாடியும், கும்மியடித்து, தப்படித்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

பறையடித்து…
இதனிடையே, கணவர் கார்த்திக் குமார் சுசித்ரா மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். "சுசித்ரா மன அழுத்தில் உள்ளார். அவரை அனைவரும் தங்கள் குடும்பத

கடைகள் மூடி…
நெடுவாசல் கிராம மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடைகள் எப்போதும் மூடியே கிடக்கின்றன. இது ஒரு தொடர் பந்த் போன்று காட்சி அளிக்கிறது.

முதுகில் குத்தாதே…
போராட்டத்தில் பங்கேற்ற சிறுவர்கள் தங்களது உடலில் எதிர்ப்பு வாசகங்களை மையினால் எழுதி எதிர்ப்பு காட்டி வருகின்றனர். சிறுவர்கள் தங்களது முதுகு பகுதியில் "முதுகில் குத்தாதே" என்றும் வயிற்று பகுதியில் "வயிற்றில் அடிக்காதே" என்றும் எழுதி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இன்றும் ஆலோசனை…
விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்கமாட்டோம் என்று மாவட்ட ஆட்சியர் கணேஷ் கூறியுள்ள நிலையில், இன்று நெடுவாசல் மற்றும் நல்லாண்டார் கொல்லை போராட்டக்குழுவினருடன் அவர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். முன்னதாக, நேற்று மாலை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் மதுரையில் போராட்டக் குழுவினர் நடத்தி பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications