19 வயசுதான்.. மாணவிகளின் முகத்தை.. கவர்ச்சி உடலுடன் ஒட்டி டிக்டாக் அட்டகாசம்.. தூக்கிய போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

தென்காசி: குடும்ப பெண்களின் உடலமைப்பு + கல்லூரி மாணவிகளின் முகம்.. இவைகளை ஒன்று சேர்த்து ஆபாசமாக மார்பிங் செய்து.. அவைகளை டிக்டாக் மற்றும் வீடியோக்களாக பதிவிட்ட 19 வயது கண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Recommended Video

    Tik Tok Kannan | Kathal Mannan | Police arrest

    தென்காசி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள அருணாசலபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ்... இவரது மகன் கண்ணன்.. வயசு 19தான் ஆகிறது.. படிப்பும் சரியாக படிக்கவில்லை... வெறும் 9-ம் வகுப்புதான் படித்துள்ளார்.

    ஆனால் டிக்-டாக்கில் கிட்டத்தட்ட 1,000 வீடியோக்கள் வரை அப்லோடு செய்துள்ளார். இவருக்கு 4.18 லட்சம் ஃபாலோயர்ஸ் உள்ளனர்.. இதற்கு காரணம் இவரது வீடியோக்கள்தான்.

    படு ஸ்மார்ட்

    படு ஸ்மார்ட்

    கண்ணன் பார்ப்பதற்கே படு ஸ்மார்ட்டாக இருக்கிறார்.. 9ம் வகுப்பு படித்துவிட்டு, காலேஜ் படிப்பதாக சொல்லி வந்துள்ளார்.. அதற்கேற்ற மாதிரி டிப்டாப் டிரஸ்கள்தான் அணிவார்.. பார்ப்பதற்கே பணக்கார வீட்டு பையன் போல இருக்கவும், கல்லூரி மாணவிகள் சிலரும் கண்ணனிடம் நட்பாக பழகி வந்துள்ளனர். அதாவது 25க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் தனி தனியாக.. ஆசை வார்த்தை கூறி... காதல் வலையில் விழ வைத்துள்ளார்.

    போட்டோக்கள்

    போட்டோக்கள்

    ஒரு மாணவியை விழ வைப்பது இன்னொரு மாணவிக்கு தெரியாது.. எல்லாருமே கண்ணனின் டிரஸ், பேச்சினை கண்டு ஏமாந்துவிட்டனர். அந்த மாணவிகளிடம் செல்பி போட்டோ, வீடியோக்களை எடுத்து கொள்வார்.. பிறகு கல்யாணமான பெண்களின் போட்டோக்களையும் தனியாக எடுத்து கொள்வார்.. இவைகளை மார்பிங் செய்து டிக்-டாக்கில் வெளியிட்டு வந்துள்ளார் கண்ணன்.. இந்த போட்டோ, வீடியோக்களை ஏராளமானோர் ஜொள்ளு விட்டு பார்த்து வந்துள்ளனர்.

    பணம்-நகை

    பணம்-நகை

    ஒரு கட்டத்தில், இந்த போட்டோ, வீடியோக்களை வைத்து சில பெண்களை கண்ணன் மிரட்டியும் வந்திருக்கிறார். இவரது மிரட்டலை கண்டு பயந்த மாணவிகள், வீட்டுக்கு விஷயம் தெரிந்துவிடக்கூடாது என்று தாங்கள் அணிந்திருந்த செயின், வளையல், மோதிரங்களை கழட்டி தந்துள்ளனராம். ஆனாலும் ஒரு சில பெண்கள் இதற்கு பணியவில்லை.. கண்ணனின் மிரட்டலை பொறுக்க முடியாமல் தென்காசி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தனர்.

    மெமரி கார்டு

    மெமரி கார்டு

    அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கண்ணனை போலீசார் கைது செய்தனர்.. அவரிடமிருந்து ஸ்மார்ட் போன்கள், மெமரி கார்ட், பென்டிரைவ் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன. கண்ணன் மீது இப்போது வழக்கு பதியப்பட்டுள்ளது.. விசாரணையும் நடந்துவருகிறது. கண்ணனின் வலையில் சில தொழிலதிபர்கள், சில அரசு அதிகாரிகளின் மகள்களும் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. கண்ணனுக்கு நண்பர்கள் 2 பேர் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

    ஆபாச மார்பிங்

    ஆபாச மார்பிங்

    மாணவிகள் மற்றும் குடும்ப பெண்களின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து அதனை ரசிப்பதுதான் இவர்களின் வேலையாக இருந்திருக்கிறது.. இதுபோக ஒரு யூ-டியூப் சேனலையும் இவர்கள் நடத்தி வந்துள்ளனர்.. அது சம்பந்தமான விசாரணையும் நடக்கிறது.. கண்ணனின் தம்பிக்கும் இந்த சம்பவங்களில் தொடர்பு உள்ளதாம்.. எல்லாவற்றையும் போலீசார் விசாரணை மூலம் வெளிக்கொண்டு வருவார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+